வேலணை பிரதேச சபை e1651155719223
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரசுக்கு எதிராக வேலணை பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

Share

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நிலவும் யாழ். வேலணை பிரதேச சபையில் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என இன்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சபைக்குச் சென்றிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் இந்தச் செயற்பாடு தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பின்னர் ஆளும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் கறுப்புப் பட்டி அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்தனர்.

நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதியும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share

1 Comment

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...