lakshman kiriella
அரசியல்இலங்கைசெய்திகள்

இந்த அரசுக்கு சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்கவே கிடைக்காது! – அடித்துக் கூறுகிறார் லக்‌ஷ்மன் கிரியல்ல

Share

” இந்த அரசுக்கு சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே, புதிய அரசு அமைந்தால்தான் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறக்கூடியதாக இருக்கும் .” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தவேளை, அது தவறான நடவடிக்கை என எதிரணியாகிய நாம் சுட்டிக்காட்டினோம். திருத்தங்களை முன்வைத்தோம். ஆனால் எமது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைய அரசியல் நெருக்கடி நிலைக்கு இந்த 20 வும் பிரதான காரணமாகும்.

நாடாளுமன்றம் வசம் இருந்த அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தால் எவ்வாறு தீர்வை தேட முடியும் என்பதை சபாநாயகர் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது 20 ஐ இல்லாதொழிக்க முற்படுகின்றனர். இது காலம் கடந்த ஞானம். எனவே, புதிய அரசு அமைந்தால்தான் பிரச்சினைக்கு தீர்வை தேட முடியும்.” – என்றும் கிரியல்ல குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...