lakshman kiriella
அரசியல்இலங்கைசெய்திகள்

இந்த அரசுக்கு சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்கவே கிடைக்காது! – அடித்துக் கூறுகிறார் லக்‌ஷ்மன் கிரியல்ல

Share

” இந்த அரசுக்கு சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே, புதிய அரசு அமைந்தால்தான் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறக்கூடியதாக இருக்கும் .” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தவேளை, அது தவறான நடவடிக்கை என எதிரணியாகிய நாம் சுட்டிக்காட்டினோம். திருத்தங்களை முன்வைத்தோம். ஆனால் எமது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைய அரசியல் நெருக்கடி நிலைக்கு இந்த 20 வும் பிரதான காரணமாகும்.

நாடாளுமன்றம் வசம் இருந்த அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தால் எவ்வாறு தீர்வை தேட முடியும் என்பதை சபாநாயகர் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது 20 ஐ இல்லாதொழிக்க முற்படுகின்றனர். இது காலம் கடந்த ஞானம். எனவே, புதிய அரசு அமைந்தால்தான் பிரச்சினைக்கு தீர்வை தேட முடியும்.” – என்றும் கிரியல்ல குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...