இலங்கை

யாழ். பொலிஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்த இளைஞர்!

Published

on

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த இளைஞரே கழுத்தில் காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பிடியாணை உத்தரவை நிறைவேற்றும் முகமாக யாழ்ப்பாணம் பொலிஸாரால் இளைஞர் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த இளைஞர் தனது உடமையில் இருந்த பிளேட்டை எடுத்து, தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார் எனக் கூறி பொலிஸாரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version