யாழ். பொலிஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்த இளைஞர்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பொலிஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்த இளைஞர்!

Share

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த இளைஞரே கழுத்தில் காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பிடியாணை உத்தரவை நிறைவேற்றும் முகமாக யாழ்ப்பாணம் பொலிஸாரால் இளைஞர் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த இளைஞர் தனது உடமையில் இருந்த பிளேட்டை எடுத்து, தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார் எனக் கூறி பொலிஸாரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...