Prasanna Ranatunga 44 scaled
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்! – விரைவில் நீதி வழங்கப்படும் என்கிறார் பிரசன்ன

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 735 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 196 பேர் சிறையில் உள்ளனர். 19 பேர் தடுப்பு காவலில் உள்ளனர். 81 பேருக்கு எதிராக விசாரணைகள் நிறைவுபெற்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 453 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை குண்டுதாரிகளின் சொத்துகளும், தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் சொத்துகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

நிலாந்த ஜயவர்தன எப்படி அரச சாட்சியாளராக மாறினார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். முன்னாள் சட்டமா திபர் தபுல என்பவரே அவரை அரச சாட்சியாளராக மாற்றினார். அந்த சட்டமா அதிபர் ஓய்வுபெறும் தருவாயில்தான், இந்த தாக்குதல் சூழ்ச்சி என்ற கருத்தை பரப்பினார். அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்கவில்லை என்பதால் அவ்வாறு செய்திருக்கலாம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள, பரிந்துரைகளை விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
buzz
உலகம்செய்திகள்

நாங்கள் ஆறு முறை நிலவுக்குச் சென்றுள்ளோம்: 1969 நிலவுப் பயணம் உண்மையே என நாசா விளக்கம்!

1969 ஆம் ஆண்டு மனிதன் நிலவில் காலடி வைத்த நிகழ்வு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும்...

25 690489b584776
செய்திகள்இலங்கை

தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது விலையுயர்ந்த நாடு

Numbeo வலைத்தளத்தின் தரவுகளின்படி, இலங்கை, தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பில் (SAARC) இரண்டாவது மிகச் செலவுமிக்க...

25 68eee1ad403f8
இலங்கைசெய்திகள்

குருந்தூர்மலையில் நில அபகரிப்பு: தொல்லியல் திணைக்கள அதிகாரி மீது பௌத்த துறவியே குற்றச்சாட்டு – சாணக்கியன் கடிதத்தை வெளியிட்டார்

குருந்தூர்மலைப் பிரதேசத்தில் திட்டமிட்டுக் காணிகள் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, தொல்பொருள் திணைக்களத்தின் பிரதி அத்தியட்சகராகச்...

Jaffna Uni 1200x675px 28 10 25 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேல் மர்மம்: இரண்டு துப்பாக்கி மகசின்கள் மற்றும் வயர்கள் மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இரண்டு துப்பாக்கி மகசின்களும் (Magazines) மற்றும் வயர்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்...