maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்டெடுக்க 20 ஐ ஒழிக்க வேண்டும்! – மைத்திரி வலியுறுத்து

Share

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு 20 ஆவது அரசியல் திருத்தத்தை இல்லாதொழித்து 19ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டின் நெருக்கடி நிலைக்கு புதிய அமைச்சரவை நியமனம் தீர்வு பெற்றுக் கொடுக்கப் போவதில்லையென தெரிவித்த அவர், தமது காலத்தில் கொண்டுவரப்பட்ட 19ஆவது அரசியல் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் 11 கட்சிகளின் எம்பிக்கள் மற்றும் பொதுஜனபெரமுன எம்.பிக்கள் குழுவொன்றும் தற்போது ஒன்றாக எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளதைக் காணமுடிகின்றது.

பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் புதிய அமைச்சரவையை அமைப்பதன் மூலம் அப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை.

கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்தே பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அரசாங்கத்திலுள்ள அனைவரும் பதவி விலக வேண்டும் என்றும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றுமே நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வாறெனினும் சபையில் நாம் 40 பேரும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான குழுவாக எதிர்க்கட்சியில் அமரவில்லை. நாம் எதிர்க்கட்சியில் சுயாதீன குழுவாகவே செயற்படுவோம்.

நாளுக்கு நாள் நெருக்கடிகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் மக்கள் பெரும் ஆத்திரமடைந்துள்ளனர். அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக இவர்களின் போராட்டத்தை நிறுத்த முடியாதென்பது தெரிகின்றது.

தற்போதைய அரசுகடந்த இரண்டு வருடங்களில் செய்த அனைத்து வேலைத்திட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது.

அதனால் மக்கள் இந்த அரசாங்கத்தை முழுமையாக விலக வேண்டும் என்றே கூறுகின்றனர். அதே நிலைப்பாட்டிலேயே சுதந்திரக் கட்சியும் உள்ளது.

நாட்டுக்கான வேலைத்திட்டங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.

20 ஆவது திருத்தத்தை நீக்கி எமது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...