பொன்சேகா
அரசியல்இலங்கைசெய்திகள்

மூவின மக்களும் ஒன்றிணைந்து கோட்டாவை வீட்டுக்கு விரட்டுங்கள்! – பொன்சேகா வேண்டுகோள்

Share

“கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இளையோர்கள் தொடர்ந்து முன்னெடுத்துவரும் போராட்டம் உன்னதமானது. இந்தப் போராட்டத்தில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும் ஒன்றிணைந்து பங்கேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு விரட்டியக்க வேண்டும்.”

– இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காலிமுகத்திடல் வரலாறு காணாத இடமாக மாறி வருகின்றது. ஜனாதிபதிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் இளையோர்கள் கொதித்தெழுந்து போராடி வருகின்றனர்.

ஆனால், வெட்கம் கெட்ட ஜனாதிபதி பதவி விலகாமல் இருக்கின்றார். பிரதமரும் பதவி விலகப் பின்னடிக்கின்றார். அதனால் அரசும் கலையாமல் இருக்கின்றது.

‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷம் காலிமுகத்திடலில் மட்டுமன்றி நாடெங்கும், உலகெங்கும் ஒலிக்கின்றது.

பதவி ஆசை பிடித்து நாட்டை அதலபாதாளத்துக்கு தள்ளிவிட்ட ஜனாதிபதியையும், அரசையும் மூவின மக்களும் ஒன்றிணைந்து வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...