WhatsApp Image 2022 04 13 at 11.11.47 AM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அராலி மத்தி சிறுவர்களால் கவனவீர்ப்பு போராட்டம்!

Share

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற விபத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை அராலி மத்தி சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் எந்த காலை 9 45 மணியளவில் முன்னெடுத்தனர்.

அராலி மத்தி அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து அராலி சமுர்த்தி வங்கி வரை வீதி வலமாக பதாகைகளை ஏந்திய வண்ணம் வருகைதந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது விபத்துக்களை தவிர்ப்போம் உயிர்களை காப்போம்! ! அழிக்காதே அழிக்காதே உயிர்களை அழிக்காதே!, வேண்டாம் வேண்டாம் அதிவேகம் வேண்டாம்!, கண்ணீரின் வலியறிந்தும் கவனயீனம் தொடர்வது ஏன்!, மதுபோதையில் வாகனம் ஓடுவதை முற்றாக தவிர்ப்போம்!, பயன்தரும் பயிரை முளையிலே கிள்ளி எறிந்தது ஏன்!, உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

அண்மையில் யாழ்ப்பாணம் சத்திர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில்,இவ்வாறு இடம்பெறும் விபத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இளம் சிறுவர்களின் உயிர்கள் விபத்துக்களால் பறிபோவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 04 13 at 11.11.47 AM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...