sanda pandara
அரசியல்இலங்கைசெய்திகள்

சாந்த பண்டாரவின் சுதந்திர கட்சி பதவிகள் நீக்கம்!!

Share

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி கரிம உர உற்பத்தி மற்றும் ஒழுங்குபடுத்தலை ஊக்குவிக்கும் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் அனைத்து சுதந்திர கட்சி பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசாரச் செயலாளர், பிரதிச் செயலாளர், தம்பதெனிய தேர்தல் அமைப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஆளும் கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாக நாடாளுமன்றத்தில் அமரத் தீர்மானித்த போதிலும் பண்டார இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

கட்சியின் தலைவர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், பண்டாரவை மத்திய குழுவிலிருந்து நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஷசீந்திர ராஜபக்ச அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பண்டார பதவியேற்றார்.

மறுபுறம், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் பதவியை ஏற்றுக்கொண்டதாகவும், அண்மையில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்த 41 பாராளுமன்ற உறுப்பினர்களில் தானும் ஒருவன் எனவும் பண்டார தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...