WhatsApp Image 2022 04 12 at 4.26.29 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்! – இதுவரை 735 பேர் கைது என்கிறார் கமல் குணரத்ன

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன – என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய வகையில் விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றோம். இதுவரை உரிய வகையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இனியும் முன்னெடுக்கப்படும்.

இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 196 பேர் தடுப்பு காவலில் உள்ளனர். 81 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பரந்துபட்ட விசாரணை முன்னெடுக்கப்படுவருகின்றது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...

07 7
செய்திகள்உலகம்

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள்: 1,332 பொதுமக்கள் உயிரிழப்பு – ஐநா சபையில் ஈரான் தூதுவர் அதிர்ச்சி தகவல்!

கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் மேற்கொண்டு வரும் தீவிர...