Ali Sabry2
அரசியல்இலங்கைசெய்திகள்

அழுத்தம் காரணமாகவே இராஜினாமா செய்தேன்! – கூறுகிறார் அலிசப்ரி

Share

” அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு எனது குடும்ப உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்தனர். எனவே, நான் நிதி அமைச்சர் பதவியை துறந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது .” – என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போது நான்தான் நிதி அமைச்சர். சட்டப்பூர்வமாகவே அப்பதவியை வகிக்கின்றேன். எனது தலைமையிலான குழுவே 18 ஆம் தேதி சர்வதேச நாணய நிதியம் செல்லவுள்ளது.

நிதி அமைச்சு பதவியை ஏற்க நான் தயாராக இருக்கவில்லை. ஆனால் ஆளுங்கட்சியின் விடுத்த கோரிக்கையால்தான் அந்த பதவியை ஏற்றேன். அதன்பின்னர் எனக்கு அழுத்தங்கள் வந்தன. குடும்ப உறுப்பினர்கள்கூட, பதவி துறக்குமாறு வலியுறுத்தினர்.

பொருளாதார நிபுணர்கள்தான் நிதி அமைச்சு பதவியை ஏற்க வேண்டும் என்ற கருத்து சமூகத்திலும் நிலவியது. எனவே, தகுதியான ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க வழிவிட்டே நான் பதவி விலகினேன். எனினும், எவரும் அந்த பதவியை ஏற்கவில்லை. அதனால்தான் நாட்டு நலன் கருதி நான் ஏற்றேன்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Savings Accounts 2021.11.26 768x401 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உங்க அடையாள அட்டையில 6 லட்சம் கடன்!: திருகோணமலையில் நூதன பணமோசடி – பெண் ஒருவர் ஒரு லட்சத்தை இழந்தார்!

வங்கிக் கடன் மற்றும் பொலிஸ் விசாரணையைக் கூறி அச்சுறுத்தி பணமோசடி செய்யும் கும்பலிடம் சிக்கி, திருகோணமலையைச்...

26 6959943583121 md
உலகம்செய்திகள்

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது: ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவசர விவாதம்!

வெனிசுலாவில் கடந்த ஜனவரி 3-ஆம் திகதி அமெரிக்க இராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ (Operation...

images 8 1
செய்திகள்இலங்கை

வீதி விளக்குகளுக்கும் மக்களே பணம் கட்ட வேண்டுமா? – புதிய மின்சாரக் கொள்கையில் சர்ச்சைத் திட்டம்!

உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, வீதி விளக்குகளுக்கான செலவை அந்தந்தப் பகுதி மக்களிடமே அறவிடுவதற்குப்...

images 7 2
செய்திகள்இலங்கை

புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய வீடுகள்: பாதுகாப்பு அமைச்சின் அதிரடி அறிவிப்பு!

அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) புயல் காரணமாக முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகளை...