sampanthan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் நலன் கருதிச் செயற்படுங்கள்! – அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து

Share

“நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது இலங்கை அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சியை வரவேற்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழக முதலமைச்சரின் இந்த நல்ல முயற்சியை வரவேற்கின்றோம். அதேபோல் இந்திய மத்திய அரசும் இக்கட்டான நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு உதவவேண்டும். முழு அளவிலான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கவேண்டும்.

அதேவேளை, இந்திய அரசின் வேண்டுகோள்கள் தொடர்பில் இலங்கை அரசு கவனம் செலுத்தவேண்டும். நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது இலங்கை அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.

தமிழகத்தினதும், இந்தியாவினதும் முழுமையான பங்களிப்பு தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களிலும், இலங்கையின் தேசிய மட்டத்திலும் தொடரவேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...