DSC08715
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சமையல் எரிவாயு பெற வந்த மக்களை ‘நாயே’ என திட்டிய வர்த்தகர்!

Share

சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த மக்களை, ‘நாயே’ என விளித்து – திட்டி, வர்த்தக நிலைய உரிமையாளர் நடந்துகொண்ட சம்பவமொன்று இன்று கொட்டகலை நகரில் பதிவானது.

நாட்டில் எரிபொருளுக்கும், சமையல் எரிவாயுவுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றைப் பெறுவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை மக்களுக்கும், சாரதிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

கொட்டகலை நகரிலுள்ள இரு வர்த்தக நிலையங்கள் ஊடாகவே சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி அதிக விலைக்கு லிற்றோ எரிவாயு விநியோகித்த வர்த்தகர் ஒருவரின் அனுமதிப் பத்திரத்தை லிற்றோ நிறுவனம் இடைநிறுத்தி வைத்துள்ளது.

DSC08743

இந்நிலையில் மற்றைய வர்த்தக நிலையத்திலுள்ள உரிமையாளர் வாடிக்கையாளர்களை மதித்து நடப்பதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்துக்கு இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ளன. எனினும், சுமார் 50 பேருக்கு மாத்திரமே விநியோகிக்கப்பட்டுள்ளது. ஏனைய சிலிண்டர்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன. இதனால் சிலர் வீடுகளுக்கு திரும்பினர். சிலர் இதனை எதிர்த்து போராடினர்.

ஏன் இவ்வாறு செயற்படுகின்றீர்கள் என வினவியபோதே, வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், வாடிக்கையாளர்களை நாயே என விளித்துள்ளார். இதனால் கடுப்பாகிய வாடிக்கையாளர்கள் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து கொட்டகலை வர்த்தக சங்கத் தலைவர் விஷ்வநாதன் புஷ்பாவும், திம்புள்ள பத்தனை பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நிலைமையை சுமுக நிலைக்கு கொண்டுவந்தனர்.

சம்பந்தப்பட்ட உரிமையாளர் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரினார். அதன்பிறகு, சில வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

DSC08734 DSC08728

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ilankumaran
செய்திகள்இலங்கை

யாழில் மீற்றர் வட்டி மாஃபியாவுக்கு எதிராக மக்கள் தகவல் தரலாம்: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மாஃபியாவுக்கு எதிராக மக்கள் தமக்குத் தகவல்களை வழங்கலாம் எனத்...

25 68fc8352b9138
செய்திகள்இலங்கை

நவம்பர் 5 அன்று நாடு தழுவிய சுனாமி தயார்நிலைப் பயிற்சி: அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவிப்பு!

நாடு முழுவதினையும் உள்ளடக்கி நவம்பர் 5 ஆம் திகதி சுனாமி தயார்நிலைப் பயிற்சியை நடத்த ஏற்பாடுகள்...

image 2c8a8047e8
செய்திகள்இலங்கை

திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை!

திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது என்று இலங்கை தனியார் பேருந்து...

1736086372 accident 2
செய்திகள்இலங்கை

வவுனியாவில் கடந்த 5 ஆண்டுகளில் விபத்துக்களால் 58 பேர் பலி! இந்த ஆண்டு பலி வீதம் அதிகரிப்பு!

வவுனியாவில் (Vavuniya) 2021ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பல்வேறு விபத்து சம்பவங்களினால் 58 பேர்...