Navy
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்

Share

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கைக் கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

கற்கள், போத்தல்களை வீசியெறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு படகிலும் 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரகள் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#SrilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...