JeyaSegaran
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொருட்கள் விநியோகம் இருக்கும்: இருந்தாலும் உழுந்து விதையுங்கள்!!

Share

யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும், மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என யாழ் வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார்

யாழ் வணிகர் கழகத்தில் இன்று (08) மதியம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திற்கு பின்னர் நாட்டில் படிப்படியாக சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அந்தந்த நிறுவனங்கள் விநியோகத்தை மட்டுப்படுத்தியதன் காரணமாக பால் மா, எரிவாயு சிலிண்டர், கோதுமை மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புகள் காரணமாக மீளப்பெறப்பட்டு அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

60 – 70 வீதமான கோதுமை மா விநியோகம் தற்போது சீராகிவருகிறது. பாண் மற்றும் பணிஸ் மாத்திரம் போதுமான அளவிற்கு கோதுமை மா வெதுப்பகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. பால்மா விநியோகமும் இந்த மாத இறுதியில் சீரடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நெல்லின் விலை அதிகரித்ததால், உள்ளூர் நாட்டரிசி 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் அரிசி 130 – 140 ரூபாய் வரையும் கீரிசம்பா 190 – 200 ரூபாய் வரை விற்கப்படுகின்றது.

உள்ளூர் அரிசிகளின் விலை தைப்பூசத்திற்கு பின்னர் சற்று குறைவடையும் சாத்தியக்கூறுகள் உள்ளது. 15 – 20 ரூபாய் வரை இந்த விலை இறக்கம் ஏற்படலாம்.

ஆனால் நெல் உற்பத்தியில் உரத் தட்டுப்பாடு மழையின்மை போன்றவற்றால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றது.

நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கின்ற நேரத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. உளுந்து, பயறு, எள்ளு மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்ச்செய்கைகளில் விவசாயிகள் ஈடுபடவேண்டும்.

அரசாங்கம் உழுந்தை தடை செய்துள்ள நிலையில் அனைவரும் உழுந்தை அதிகளவில் உற்பத்தி செய்ததால் விலை வெகுவாக குறைந்துள்ளது.

வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என்றார்.


#SrilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...