Mahindanatha aluthkamake
இலங்கைஅரசியல்செய்திகள்

அநுரகுமார திஸாநாயக்கவை வம்புக்கு இழுக்கும் மஹிந்தானந்த!

Share

இலங்கையில் கடந்த 7 மாதங்களாக எல்லா இடங்களிலும் என்னைப் பற்றிதான் பேச்சு. எனது கொடும்பாவிகளை எரித்தனர். திட்டி தீர்த்தனர். ஆனாலும், நஞ்சற்ற விவசாயம் என்ற கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டேன்.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“கொரோனா பெருந்தொற்றால் சர்வதேச சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதனால்தான் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் இங்கும் அதிகரித்துள்ளன. இந்நிலைமை நீடிக்காது. மார்ச், ஏப்ரல் ஆகும்போது சாதாரண நிலைக்கு வந்துவிடும்.

நாட்டு மக்கள் தற்போது அரசை விமர்சிக்கின்றனர். அது மக்களுக்குள்ள உரிமை. ஆனால் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திதான், தான் ஜனாதிபதி என்ற நினைப்பு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வந்துவிட்டது. 5 அடி உயரம்கூட இல்லை.

அவர் ஜனாதிபதியாகிவிட்டார். அந்த நினைப்பில் மகாநாயக்க தேரர்களையும் சந்திக்க சென்றுவிட்டனர்.

சேதன பசளை மூலமான விவசாயம் என்ற ஜனாதிபதியின் திட்டம் சிறப்பானது. அந்த திட்டத்தை நான் செயற்படுத்துவேன். எதிர்ப்புகளுக்கு அஞ்சி, ஒளியமாட்டேன். ” – என்றார்.

#SrilankaNews

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...