Mahindanatha aluthkamake
இலங்கைஅரசியல்செய்திகள்

அநுரகுமார திஸாநாயக்கவை வம்புக்கு இழுக்கும் மஹிந்தானந்த!

Share

இலங்கையில் கடந்த 7 மாதங்களாக எல்லா இடங்களிலும் என்னைப் பற்றிதான் பேச்சு. எனது கொடும்பாவிகளை எரித்தனர். திட்டி தீர்த்தனர். ஆனாலும், நஞ்சற்ற விவசாயம் என்ற கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டேன்.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“கொரோனா பெருந்தொற்றால் சர்வதேச சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதனால்தான் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் இங்கும் அதிகரித்துள்ளன. இந்நிலைமை நீடிக்காது. மார்ச், ஏப்ரல் ஆகும்போது சாதாரண நிலைக்கு வந்துவிடும்.

நாட்டு மக்கள் தற்போது அரசை விமர்சிக்கின்றனர். அது மக்களுக்குள்ள உரிமை. ஆனால் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திதான், தான் ஜனாதிபதி என்ற நினைப்பு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வந்துவிட்டது. 5 அடி உயரம்கூட இல்லை.

அவர் ஜனாதிபதியாகிவிட்டார். அந்த நினைப்பில் மகாநாயக்க தேரர்களையும் சந்திக்க சென்றுவிட்டனர்.

சேதன பசளை மூலமான விவசாயம் என்ற ஜனாதிபதியின் திட்டம் சிறப்பானது. அந்த திட்டத்தை நான் செயற்படுத்துவேன். எதிர்ப்புகளுக்கு அஞ்சி, ஒளியமாட்டேன். ” – என்றார்.

#SrilankaNews

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...