DSCF6912
இலங்கைசெய்திகள்

ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம்!

Share

பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீண்டகாலமாக பாடசாலை திறக்கப்படாது இருந்தமையால் முன்னாயத்தமாக துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிறு பிள்ளைகள் பாடசாலை வருவதால் சுகாதார நடைமுறைகளை அவர்களுக்கு காணொலி மூலம் காண்பித்து சமூக இடைவெளி மற்றும் கழிவகற்றல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மாணவர்கள் உணவருந்தும் இடங்களில் அதிக சமூக இடைவெளிகள் பேணப்பட வேண்டும்.

கிணறுகள் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாதிருப்பதனால் குளோரின் இட்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

போன்ற விடயங்கள் உள்ளடங்களாக சுகாதார நடைமுறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...