DSCF6912
இலங்கைசெய்திகள்

ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம்!

Share

பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீண்டகாலமாக பாடசாலை திறக்கப்படாது இருந்தமையால் முன்னாயத்தமாக துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிறு பிள்ளைகள் பாடசாலை வருவதால் சுகாதார நடைமுறைகளை அவர்களுக்கு காணொலி மூலம் காண்பித்து சமூக இடைவெளி மற்றும் கழிவகற்றல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மாணவர்கள் உணவருந்தும் இடங்களில் அதிக சமூக இடைவெளிகள் பேணப்பட வேண்டும்.

கிணறுகள் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாதிருப்பதனால் குளோரின் இட்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

போன்ற விடயங்கள் உள்ளடங்களாக சுகாதார நடைமுறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...