DSCF6912
இலங்கைசெய்திகள்

ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம்!

Share

பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீண்டகாலமாக பாடசாலை திறக்கப்படாது இருந்தமையால் முன்னாயத்தமாக துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிறு பிள்ளைகள் பாடசாலை வருவதால் சுகாதார நடைமுறைகளை அவர்களுக்கு காணொலி மூலம் காண்பித்து சமூக இடைவெளி மற்றும் கழிவகற்றல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மாணவர்கள் உணவருந்தும் இடங்களில் அதிக சமூக இடைவெளிகள் பேணப்பட வேண்டும்.

கிணறுகள் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாதிருப்பதனால் குளோரின் இட்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

போன்ற விடயங்கள் உள்ளடங்களாக சுகாதார நடைமுறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f7986211c31
செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை: மேலதிக ஆசனப் பிரச்சினைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜர்!

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை இடைக்காலத்...

articles2FFRfdZpigOe1FxwuUE5O6
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மற்றும் கிளிநொச்சியில் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ், கிளிநொச்சியில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட...

25 68f843287a66a
செய்திகள்இலங்கை

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் தேசிய மக்கள் சக்தி தீவிரம் – தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் தயார்!

வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர...

IMG 0949
செய்திகள்உலகம்

தென் கொரியாவில் வசிக்கும் தெவிநுவர பிரதான கடத்தல்காரர்: போதைப்பொருள் வலையமைப்பு குறித்து தீவிர விசாரணை!

மாத்தறை – தெவிநுவர பிரதேசத்தில் செயல்படுவதாகக் கூறப்படும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தற்போது...