PO
இலங்கைசெய்திகள்

தருமபுரம் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு!

Share

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 4 பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தருமபுரம் கல்மடு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மணல் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுகிறது என அவசர சேவை இலக்கமான 119 இற்கு அந்தப் பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த விசேட பொலிஸ் பிரிவினர் மீதே இவ்வாறு வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...