செல்வம் அடைக்கலநாதன்
இலங்கைசெய்திகள்

ஒப்படைக்கப்பட்டோர் கொல்லப்பட்டனரா? – செல்வம் எம்.பி. கேள்வி

Share

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மரணச் சான்றிதழ் மற்றும் இழப்பீடு கொடுக்கிறார் எனில் அவர்களை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறார்?

இவ்வாறு நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபை அமர்வில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி, ஐ.நா. சபை செயலாளரை நியூயோர்க்கில் சந்தித்தபோது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகிறோம் எனக் கூறியுள்ளார்.

ஆனால் சர்வதேச மனிதாபிமான அடிப்படையில் போர்க் காலங்களில் சரணடைந்தவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மரணச் சான்றிதழ் கொடுப்போம் எனக் கூறுகின்றார்.

மரணமடைந்தவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டோருக்கே மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும். அப்படி என்றால் கண்கண்ட சாட்சிகளுடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றே ஜனாதிபதி கூறுகிறார்.

அந்த வகையில் கொலை செய்தவர்களுக்கு நீதித்துறை என்ன தண்டனை வழங்கப்போகிறது?
படுகொலை செய்யப்பட்டு மரணச் சான்றிதழ் கொடுப்போம் எனக் கூறுகின்ற ஜனாதிபதி படுகொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவாரா? எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...