sumanthiran scaled
இலங்கைசெய்திகள்

பொறுப்புக்கூறலில் அரசு இரட்டை வேடம்! – சுமந்திரன்

Share

அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் இரட்டை வேடமிட்டு நாடகமாடுகின்றது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்க சென்ற ஜனாதிபதி ஐ.நா. சபை பொதுச் செயலாளரை சந்தித்தபோது ஒரு கருத்தை கூறுகின்றார். அதற்கு வெளிவிவகார அமைச்சு வேறு ஒரு காரணிகளை கூறுகிறது.

இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளக செயற்பாடுகளில் ஐ.நாவுடன் இணைந்து செயற்பட கடமைப்பட்டுள்ளோம். மனித உரிமையை பலப்படுத்த இணைந்து செயற்படுவோர் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐ.நா.வுடன் இணைந்து கடமையாற்றுவோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரச்சினைகளை தீர்க்க நாம் தயார் நிலையில் உள்ளோம். இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. உள்ளக பிரச்சினையை தீர்க்க வெளியக பொறிமுறை எதற்கு? எந்தவொரு உடன்படிக்கையையும் நாம் ஏற்கமாட்டோம் எனக் கூறியுள்ளது.

இக் கருத்துக்களின் அடிப்படையில் அரசு இந்த விடயத்தில் இரட்டை நாடகம் போடுவைத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...