sumanthiran scaled
இலங்கைசெய்திகள்

பொறுப்புக்கூறலில் அரசு இரட்டை வேடம்! – சுமந்திரன்

Share

அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் இரட்டை வேடமிட்டு நாடகமாடுகின்றது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்க சென்ற ஜனாதிபதி ஐ.நா. சபை பொதுச் செயலாளரை சந்தித்தபோது ஒரு கருத்தை கூறுகின்றார். அதற்கு வெளிவிவகார அமைச்சு வேறு ஒரு காரணிகளை கூறுகிறது.

இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளக செயற்பாடுகளில் ஐ.நாவுடன் இணைந்து செயற்பட கடமைப்பட்டுள்ளோம். மனித உரிமையை பலப்படுத்த இணைந்து செயற்படுவோர் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐ.நா.வுடன் இணைந்து கடமையாற்றுவோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரச்சினைகளை தீர்க்க நாம் தயார் நிலையில் உள்ளோம். இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. உள்ளக பிரச்சினையை தீர்க்க வெளியக பொறிமுறை எதற்கு? எந்தவொரு உடன்படிக்கையையும் நாம் ஏற்கமாட்டோம் எனக் கூறியுள்ளது.

இக் கருத்துக்களின் அடிப்படையில் அரசு இந்த விடயத்தில் இரட்டை நாடகம் போடுவைத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...