sumanthiran scaled
இலங்கைசெய்திகள்

பொறுப்புக்கூறலில் அரசு இரட்டை வேடம்! – சுமந்திரன்

Share

அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் இரட்டை வேடமிட்டு நாடகமாடுகின்றது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்க சென்ற ஜனாதிபதி ஐ.நா. சபை பொதுச் செயலாளரை சந்தித்தபோது ஒரு கருத்தை கூறுகின்றார். அதற்கு வெளிவிவகார அமைச்சு வேறு ஒரு காரணிகளை கூறுகிறது.

இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளக செயற்பாடுகளில் ஐ.நாவுடன் இணைந்து செயற்பட கடமைப்பட்டுள்ளோம். மனித உரிமையை பலப்படுத்த இணைந்து செயற்படுவோர் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐ.நா.வுடன் இணைந்து கடமையாற்றுவோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரச்சினைகளை தீர்க்க நாம் தயார் நிலையில் உள்ளோம். இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. உள்ளக பிரச்சினையை தீர்க்க வெளியக பொறிமுறை எதற்கு? எந்தவொரு உடன்படிக்கையையும் நாம் ஏற்கமாட்டோம் எனக் கூறியுள்ளது.

இக் கருத்துக்களின் அடிப்படையில் அரசு இந்த விடயத்தில் இரட்டை நாடகம் போடுவைத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...