CV Vigneshwaran 67897898
இலங்கைசெய்திகள்

லொஹான் விவகாரத்தில் அரசு கண்துடைப்பு நாடகம்! – விக்னேஸ்வரன் காட்டம்

Share

லொஹான் விவகாரத்தில் அரசு கண்துடைப்பு நாடகம்! – விக்னேஸ்வரன் காட்டம்

லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுத்த கொலைமிரட்டல் அச்சுறுத்தல் தொடர்பில் அரசின் செயற்பாடானது கண்துடைப்பு நாடகமே.  உண்மையில் குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை கிடைக்கப் போவதில்லை.

இதனை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் குற்றங்கள் புரிபவர்களுக்கு தண்டனை கிடைக்கப்போவதில்லை. அவர்கள் மிகக் கேவலமான குற்றங்களைப் புரிந்துவிட்டு தமது பதவியை இராஜினாமா செய்து எதுவும் நடக்காதது போல சுதந்திரமாக சுற்றி திரிவர்.

ஹெலிகொப்டர் மூலம் கடந்த 12 ஆம் திகதி அநுனநராதபுரம் சிறைக்கு பயணம் செய்து நன்றாக குடித்துவிட்டு சிறைக் கைதிகளை சிறைக் கூண்டுக்கு வெளியே வரச் சொல்லி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் லொஹான் ரத்வத்த. சிறைக் கைதிகளை வெளியே அழைத்து எந்தத் தீங்கும் விளைவிக்கலாம் என்றாகிவிட்டது.

இது தமிழ் மக்களை இழிவுபடுத்தும் செயற்பாடாகும். பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் இடையே பிளவு ஏற்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. லொஹான் ரத்வத்த உடன் கைது செய்யப்பட வேண்டும் உடனே சம்பந்தப்பட்ட சி.சி.ரி.வி காணொலி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

லொஹான் கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டாலும் விசாரணைகளின் போது தமிழ் அரசியல் கைதிகள் சாட்சிகளாக உண்மை கூறினாலும் அவர்களின் சாட்சியம் பக்கச் சார்புடையது எனத் தெரிவித்து அவரை விடுதலை செய்யும் வாய்ப்புக்களும் அதிகம் உள்ளன என அவரது யறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...