rtjy 325 scaled
இலங்கைசெய்திகள்

20 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்

Share

20 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் செ. துஷியந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நேற்று(28.10.2023) இடம்பெற்ற இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “கடந்த காலங்களை விட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இருநூறு வீதத்திற்கும்மேல் உயர்ந்துள்ளது. உணவு, பானங்களின் விலைகள், எரிபொருள், பாடசாலை பேருந்து கட்டணம், பிள்ளைகளின் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளன.

இவை தற்போதும் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. புள்ளி விபரவியல் திணைக்களம் திரட்டிய தகவலின்படி 2023ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் இருந்து நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து 2,421 ரூபா குறைந்தபட்ச செலவாக உள்ளது.

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில் குறைந்த பட்சம் அரச ஊழியர்கள் வாழ்வதற்காக 20 ஆயிரம் ரூபாய் நியாயமான சம்பள அதிகரிப்பை வேண்டி நிற்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

இதன்போது கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த முக்கிய தீர்மானங்களும் இங்கு நிறைவேற்றப்பட்டன.

இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.லவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்க பொதுச் செயலாளரும், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருமான ஏ.புஹாது, நிதிச் செயலாளர் க.நடராஜா, தேசிய அமைப்பாளர் எஸ்.துஷியந்தன், உப தலைவர் கே.திருமாறன் உட்பட பெறுமளவான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...