9 2
இலங்கைசெய்திகள்

மோசடி வழக்கு வர்த்தகர் விரஞ்சித் தம்புகலவின் வங்கி கணக்கில் பல மில்லியன் டொலர்கள்

Share

மோசடி வழக்கு வர்த்தகர் விரஞ்சித் தம்புகலவின் வங்கி கணக்கில் பல மில்லியன் டொலர்கள்

இலங்கையில், நாடளாவிய ரீதியில் விழாக்கள் மற்றும் கச்சேரிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பிரபலமடைந்த வர்த்தகர் விரஞ்சித் தம்புகல (Viranjith Thambugala,), 2022 ஆம் ஆண்டில் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை தனது கணக்கில் பெற்றுள்ளதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் (Dileepa Peiris) கொழும்பு மேலதிக நீதவானிடம், இதனை தெரிவித்துள்ளார்.

எழுபது மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்புகலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குறித்த வழக்கை கையாள்வதற்காக கப்பம் கோருவது குறித்து இரகசியமான அல்லது கேமராவில் வாக்குமூலம் வழங்குவது போன்ற செயல்களால்,நீதிமன்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக திலீப குற்றம் சுமத்தினார்.

இவ்வாறான நடவடிக்கைகள் நிதி மோசடி மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளை மோசமாக பாதிக்கும் என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், சந்தேகநபர் வர்த்தகர் என்ற போதிலும், அவரது பெயரில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக இடமோ அல்லது தொடர்புடைய கணக்காளரோ கண்டுபிடிக்கப்படவில்லை என திலீப பீரிஸ் தெரிவித்தார்.

இந்தநிலையில் குறித்த வழக்கு அக்டோபர் 3ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...