25 683cef4d4a795
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் இரண்டு அதிகாரிகள் கைது

Share

வெலிக்கடை சிறைச்சாலையின் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு அதிகாரிகளிடமிருந்தும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையின் அவசர பதிலளிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரும், சாதாரண பணியில் ஈடுபட்டு வந்த பொறுப்பதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகளிடமிருந்து ஹெரோயின், ஐஸ் போன்ற போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகசீன் சிறைச்சாலை அதிகாரியின் தகவல்களுக்கு அமைய இந்த இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலனறுவை மற்றும் அவிசாவளை பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...