25 6844220207a6e
இலங்கைசெய்திகள்

கடந்த ஆட்சிகளின் நடந்த மற்றுமொரு பாரிய மோசடி! பலர் உயிரிழப்பின் பின்னணி

Share

2009க்கு முன்பு வழங்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க தேவையில்லாத 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது.

எனினும் வழங்கப்பட்ட பரிந்துரையை போக்குவரத்து அமைச்சு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட பெரும்பாலான கடுமையான விபத்துக்கள், 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களைப் பெற்ற சாரதிகளால் ஏற்பட்டவை என தெரியவந்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறித்த பரிந்துரையை செய்திருந்த போதும் அதனை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ சான்றிதழ்களை பெற்ற பிறகு, பின்னர் சாரதிகளின் உரிமங்களை ரத்து செய்து, அந்த ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிமங்களை வழங்க முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகத்தால் முடிவு எடுக்கப்பட்டது.

எனினும் கடந்த அரசாங்கத்தின் பலமான நபரால் இந்த பரிந்துரை இடைநிறுத்தப்பட்டது.

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தலைமையிலான திணைக்கள தலைவர்கள், எதிர்காலத்தில் இந்த ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, சமகால அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஓட்டுநர் உரிமங்களைப் பெற்ற ஓட்டுநர்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்களாக இருக்கலாம் என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், இதுபோன்ற ஓட்டுநர்கள் விபத்துக்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...