25 6844220207a6e
இலங்கைசெய்திகள்

கடந்த ஆட்சிகளின் நடந்த மற்றுமொரு பாரிய மோசடி! பலர் உயிரிழப்பின் பின்னணி

Share

2009க்கு முன்பு வழங்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க தேவையில்லாத 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது.

எனினும் வழங்கப்பட்ட பரிந்துரையை போக்குவரத்து அமைச்சு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட பெரும்பாலான கடுமையான விபத்துக்கள், 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களைப் பெற்ற சாரதிகளால் ஏற்பட்டவை என தெரியவந்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறித்த பரிந்துரையை செய்திருந்த போதும் அதனை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ சான்றிதழ்களை பெற்ற பிறகு, பின்னர் சாரதிகளின் உரிமங்களை ரத்து செய்து, அந்த ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிமங்களை வழங்க முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகத்தால் முடிவு எடுக்கப்பட்டது.

எனினும் கடந்த அரசாங்கத்தின் பலமான நபரால் இந்த பரிந்துரை இடைநிறுத்தப்பட்டது.

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தலைமையிலான திணைக்கள தலைவர்கள், எதிர்காலத்தில் இந்த ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, சமகால அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஓட்டுநர் உரிமங்களைப் பெற்ற ஓட்டுநர்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்களாக இருக்கலாம் என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், இதுபோன்ற ஓட்டுநர்கள் விபத்துக்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...