25 683cf291ebc9e
இலங்கைசெய்திகள்

கோவிட் தொடர்பில் வெளியிடப்படவுள்ள இரண்டு சுற்று நிருபங்கள்

Share

கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் இரண்டு சுற்று நிருபங்கள் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்று நிருபங்கள் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்காக ஒரு சுற்று நிருபமும் சுகாதாரப் பணியாளர்களுக்காக மற்றுமொரு சுற்று நிருபமும் வெளியிடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு சுற்று நிருபங்களை வெளியிடுவது குறித்து உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆசிய பிராந்திய வலய நாடுகளில் இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கோவிட் தொற்று பரவுகையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் இலங்கையில் கண்டறியப்பட்ட கோவிட் புதிய உப திரிபு தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும், ஆபத்துக்களை எதிர்நோக்கக் கூடிய கர்பிணிகள், வயோதிபர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளிகள் முகக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டுமெனவும், மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...