Sarath Fonseka 1
அரசியல்இலங்கைசெய்திகள்

19 ஐ மீள அமுலாக்கும் வகையில் 21

Share

1. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல நேரிடும். எனவே, தற்போதைய சூழ்நிலையில் அந்த நடவடிக்கை பொருத்தமற்றது. எனவே, 19 ஐ மீள அமுலாக்கும் வகையில் 21 முன்வைக்கப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கலாம்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை 21 ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தி வரும் நிலையிலேயே பொன்சேகா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

“சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கூடிய சூழ்நிலையில் தற்போது நாடு இல்லை. எனவே, அதற்கு வழிவகுக்காத வகையிலேயே சட்டம் இயற்றப்பட வேண்டும். அந்தவகையில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீள அமுலாக்கலாம். அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. இதனை இலக்காக கொண்டு 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படுமானால் அதற்கு ஆதரவளிக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் அது ஏற்புடைய நடவடிக்கையாக அமையும.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

அதேவேளை, தனக்கும் அமைச்சு பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது என சுட்டிக்காட்டிய பொன்சேகா, தன்னால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் அதற்கு தான் உடன்படவில்லை எனவும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 8
செய்திகள்உலகம்

எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டுடன் போர்ச் சூழலை எதிர்கொள்ளும் தென்கொரியா: வரலாற்றுத் தீர்மானம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள...

16 8
இலங்கைஅரசியல்செய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணை ஆரம்பம்!

கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது ‘சதொச’ நிறுவனம் ஊடாக முறையற்ற வகையில் பலகைகளை இறக்குமதி...

15 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் கச்சா எண்ணெய் விலை உயர்வு: இலங்கையின் பொருளாதாரத் தயார்நிலை குறித்து ஆளுநர் விளக்கம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

14 8
செய்திகள்உலகம்

வடக்கு சைப்பிரஸில் துருக்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச்சூழல் காரணமாக, பிராந்தியப்...