tamilni 364 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் கனமழையால் 19 ஆயிரம் பேர் பாதிப்பு

Share

வடக்கில் கனமழையால் 19 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என மாவட்ட அரச அதிபர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் தொடர் மழை காரணமாக வடக்கின் 5 மாவட்டங்களும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

இதில் உச்சபட்சமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 715 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 572 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 372 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 904 பேர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் 628 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 271 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 279 குடும்பங்களைச் சேர்ந்த 878 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கமைய வடக்கு மாகாணத்தில் இதுவரை 6 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்படைந்துள்ளனர் என வடக்கின் 5 மாவட்டங்களின் அரச அதிபர்களும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...

world 18
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழகத் தேர்தலில் விஜய் வெற்றி: இலங்கை எம்.பி. நாமல் ராஜபக்ஷ சமூக வலைதளத்தில் வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அறிமுகமான முதல் தேர்தலிலேயே சுமார் 108...

world 17
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் நிதித்துறை மீதான வரி உயர்வு: ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது

இலங்கையில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வரி வரம்பிற்குள் கொண்டு வரும் நோக்கில், வரும் ஜூலை...

world 15
செய்திகள்இந்தியா

தமிழக அரசு அலுவலகங்களில் புகைப்படங்கள் மாற்றம்: தேர்தல் நடைமுறைகளைத் தொடர்ந்து நடவடிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம்...