ranil 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுடன் இணையும் ஐ.ம.சக்தியின் 18 எம்.பி.க்கள்

Share

சர்வக்கட்சி அரசில் இணைவது தொடர்பில் அடுத்த வாரத்துக்குள் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தியின் 18 எம்.பி.க்கள், அரசுடன் இணைய தீர்மானித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, சிங்க ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சர்வக்கட்சி அரசில் இணையக்கூடாது என சஜித் அணிக்குள் ஒரு குழு தீவிரமாக வலியுறுத்திவரும் நிலையிலேயே மற்றுமொரு குழு, கட்சி மாறுவது பற்றி பரீசிலித்து வருகின்றது.

இதனால் கட்சிக்குள் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முடிவொன்றை எடுப்பதில் கட்சி தலைமை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

சர்வக்கட்சி அரசில் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட முக்கியமான நிபந்தனைகளை ஜனாதிபதி ஏற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...