கந்தளாய் – அக்போபுர தொடருந்து நிலையத்துக்கு அருகில், தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் இருவர் உட்பட 15 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இன்று (07) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#srilankaNews

