IMG 20220322 WA0041
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கிலிருந்து ஒரே நாளில் 16 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

Share

வடக்கிலிருந்து ஒரே நாளில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தப்பிச் சென்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மன்னாரிலிருந்து 3 படகுகளில் தமிழகம் சென்றுள்ளனர்.

நேற்று ஒரு படகில் புறப்பட்ட 6 பேர் இன்று காலையும், இன்று பகல் இரு படகுகளில் புறப்பட்ட மேலும் 10 பேர் மாலையும் சென்றடைந்துள்ளனர்.

முதல் 6 பேரும் தனுஷ்கோடிக்கு அடுத்த மூன்றாம் மணல் திடலில் தரை இறங்கியுள்ளனர்.

ஏனைய 10 பேரும் இராமேஸ்வரம் – அரிச்சல் முனையிலுள்ள நான்காம் மணல் திடலில் தரை இறங்கியுள்ளனர்.

இவ்வாறு சென்ற 16 பேரில் 3 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவர்கள் தமிழகத்துக்குத் தப்பிச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
இலங்கைசெய்திகள்

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி

நெடுந்தீவு(Neduntheevu)பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச...

8 9
இலங்கைசெய்திகள்

இசைப்பிரியா – பாலச்சந்திரன் படுகொலை விவகாரம் : சட்ட நடவடிக்கைக்கு அஸ்திவாரம்!

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பான முறைப்பாடு கொழும்பில் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சட்டப்...

7 12
இலங்கைசெய்திகள்

ஷிரந்தியை காப்பாற்ற தேரர்களை நாடும் மகிந்த! போலி செய்தி தொடர்பில் வெளியான அறிக்கை

தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அழுத்தம்...

6 17
இந்தியாசெய்திகள்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவை புலனாய்வாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக இந்திய சிவில்...