IMG 20220322 WA0041
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கிலிருந்து ஒரே நாளில் 16 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

Share

வடக்கிலிருந்து ஒரே நாளில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தப்பிச் சென்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மன்னாரிலிருந்து 3 படகுகளில் தமிழகம் சென்றுள்ளனர்.

நேற்று ஒரு படகில் புறப்பட்ட 6 பேர் இன்று காலையும், இன்று பகல் இரு படகுகளில் புறப்பட்ட மேலும் 10 பேர் மாலையும் சென்றடைந்துள்ளனர்.

முதல் 6 பேரும் தனுஷ்கோடிக்கு அடுத்த மூன்றாம் மணல் திடலில் தரை இறங்கியுள்ளனர்.

ஏனைய 10 பேரும் இராமேஸ்வரம் – அரிச்சல் முனையிலுள்ள நான்காம் மணல் திடலில் தரை இறங்கியுள்ளனர்.

இவ்வாறு சென்ற 16 பேரில் 3 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவர்கள் தமிழகத்துக்குத் தப்பிச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...