25 14
இலங்கைசெய்திகள்

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு

Share

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று கிருமித் தொற்றினால் உயிரிழந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றையதினம்(18) இடம்பெற்ற நிலையில் கிருமித் தொற்றே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

இதன்போது, மின்சார நிலைய வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த நிரோராஜ் செல்வரதி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை கடந்த 01 ஆம் திகதியன்று தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்துள்ளது.

இந்நிலையில், குழந்தைக்கு தாயார் பாலூட்டிய வேளை குழந்தையால் பால் அருந்த முடியாததையடுத்து குழந்தைக்கு இரைப்பை குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து தாயும் சேயும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, குழந்தை கடந்த 16ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளதுடன் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...