25 14
இலங்கைசெய்திகள்

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு

Share

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று கிருமித் தொற்றினால் உயிரிழந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றையதினம்(18) இடம்பெற்ற நிலையில் கிருமித் தொற்றே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

இதன்போது, மின்சார நிலைய வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த நிரோராஜ் செல்வரதி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை கடந்த 01 ஆம் திகதியன்று தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்துள்ளது.

இந்நிலையில், குழந்தைக்கு தாயார் பாலூட்டிய வேளை குழந்தையால் பால் அருந்த முடியாததையடுத்து குழந்தைக்கு இரைப்பை குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து தாயும் சேயும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, குழந்தை கடந்த 16ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளதுடன் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...