26 13
இலங்கைசெய்திகள்

உயர் ஊதியத்துடன் 10 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள்! முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்

Share

உயர் ஊதியத்துடன் 10 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள்! முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்

இலங்கையில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு உயர் ஊதியத்துடனான 10 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

குறிப்­பாக இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வது நான் அதிக முன்­னு­ரிமை அளித்­தி­ருக்கும் விட­யங்­களில் ஒன்­றாகும்.

அதற்­க­மைய அடுத்த 5 வரு­டங்­களில் 100,000 க்கும் மேற்­பட்ட வேலை­வாய்ப்­புக்­களை உரு­வாக்­குவேன் என நான் ஏற்­க­னவே அறிவித்திருக்கின்றேன். அவையனைத்தும் உயர் ஊதியம் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்களாகவே காணப்படும்.

எமது நாடு தனித்துவத் திறமை வாய்ந்த இளைஞர்களைக் கொண்டிருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமாற்றத்தை முன்னகர்த்திச் செல்வதற்கு அவர்களின் திறமையைப் பயன்படுத்துவதே எனது திட்டமாகும்.

எனது பொருளாதார செயற்றிட்டமானது அதிக வருமானத்தை ஈட்டக்கூடியதும், திறன்மிக்க ஊழியர்களுக்கான உயர் ஊதியத்தை வழங்கக் கூடியதுடமான முக்கிய துறைகளை நவீனமயப்படுத்தல், பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்தல், உயர் பெறுமதியுடைய துறைகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றை மைப்படுத்தியதாகவே அமைந்திருக்கின்றது.

அது தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்துறைக் கேள்விக்கு ஏற்றவாறான கல்வித் திட்டம் என்பனவற்றையும் உள்ளடக்கியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...