எரிபொருள் கிடைக்காவிட்டால், மழை பெய்யாவிட்டால் புத்தாண்டில் மக்களுக்கு இருட்டில்வாழ வேண்டிய நிலைமையே ஏற்படும் – என்று இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், நாட்டில் தற்போது அமுலில் உள்ள 10 மணிநேர மின்வெட்டு 12 முதல் 15 மணிமணிநேரம்வரை அதிகரிக்கப்படக்கூடும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இனிவரும் காலப்பகுதியில் மின்வெட்டு நேரத்தை அறிவிப்பதற்கு பதிலாக மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை அறிவிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
எனவே, எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் எனவும் மேற்படி சங்கம் குறிப்பிட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment