24 6656b93a0954d
இலங்கைசெய்திகள்

ரஷ்யாவிற்கு அனுப்புவதாக கூறி மோசடி!! 3 பேர் கைது

Share

ரஷ்யாவிற்கு அனுப்புவதாக கூறி மோசடி!! 3 பேர் கைது

ரஷ்யாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாவிற்கு மேல் மக்களிடம் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 140 பேரிடம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மொரட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாரதி பயிற்சி நிலையமொன்றை நடத்திச் செல்பவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்த சாரதி பயிற்சி நிலையத்தை பரிசோதனைக்கு உட்படுத்திய போது 39 கடவுச்சீட்டுக்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்கள் பொதுமக்களிடம் 6 முதல் 14 இலட்சம் ரூபா வரையில் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கட்டுபெத்த மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...