எரிபொருளைப் பதுக்கி வைத்திருந்த 137 பேர் சிக்கினர்!

photo 12

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக எரிபொருளைப் பதுக்கி வைத்திருந்த 137 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சந்தேகநபர்களிடம் இருந்து 27 ஆயிரம் லீற்றர் பெற்றோலும், 22 ஆயிரம் லீற்றர் டீசலும் மற்றும் 10 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணெய்யும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version