இலங்கைசெய்திகள்பிராந்தியம்

12 கோடி மோசடி! – யாழில் சகோதரிகள் கைது

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
Share

போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதான ஒரே குடும்பத்தின் இரண்டு சகோதரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழிலுள்ள தனியார் வங்கியொன்றில் வர்த்தகரான உயிரிழந்த தமது தந்தையினால் 100 கோடி ரூபாய் பணமும் அதிகளவான நகைகளும் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை சட்டரீதியில் மீளப்பெறவேண்டும் என்றும் கூறி, 2021 ஜனவரி முதல் ஜூன் வரை பல தடவைகளில் நோர்வே பிரஜையிடமிருந்து 12 கோடி ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

23 வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மீளப் பெறப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணத்தின் ஒருபகுதி இன்னொரு நபரின் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்களை கைது செய்த சந்தர்ப்பத்தில் தெரியவந்துள்ளது.

இலங்கையரான நோர்வே பிரஜை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை கைது செய்த சந்தர்ப்பத்தில் யாழ். நீதிபதிகள், வங்கி முகாமையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கிராம சேவகர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளின் முத்திரைகள் மற்றும் கையொப்பங்கள் அடங்கிய போலி ஆவணங்கள், மோசடிக்கு பயன்படுத்திய வங்கி புத்தகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

17ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இவரையும் 18ஆம் திகதியன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவர்களை டிசெம்பர் 1ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...