24 65ffa5871c5ac
இலங்கைசெய்திகள்

மார்ச் மாத இறுதிக்குள் இஸ்ரேலில் தரையிறங்கும் தொழிலாளர்கள்

Share

மார்ச் மாத இறுதிக்குள் இஸ்ரேலில் தரையிறங்கும் தொழிலாளர்கள்

இலங்கையில் இருந்து குறைந்தது 1,000 தொழிலாளர்கள் மார்ச் மாத இறுதிக்குள் இஸ்ரேலில் தொழில் நிமித்தம் தரையிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேலின் சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிய வருகையில், “குறிப்பாக, தோடம்பழச்செய்கை துறையிலேயே அவர்கள் பணிகளுக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

அதே நேரம், கடந்த வாரம் 122 இலங்கைத் தொழிலாளர்கள் தமது நாட்டில் தரையிறங்கியுள்ளனர்.

இந்த வாரம் 377 பேரும் அடுத்த வாரம் மேலும் 258 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு வரவுள்ளனர்.

அக்டோபர் 7 ஹமாஸ் படுகொலைக்குப் பிறகு, விவசாயத் துறையில் பின்னடைவுகள் ஏற்பட்டன. எனினும் அந்த இடைவெளிகளைக் குறைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் ஒரு படியாகவே வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இஸ்ரேல் அரசின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதில் இலங்கையிடம் இருந்து உடனடி பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...

Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...