veppam
இலங்கை

வெப்பமான வானிலையானது மேலும் அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்.

Share

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பின்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் இதே போன்று நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னரே மழை நிலைமை படிப்படியாகக் குறையும் என அத்திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் ஸ்ரீமால் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டைப் பாதித்துள்ள எல் நினோ நிலைமையானது அடுத்த வருடத்தின் வடகிழக்கு பருவக்காற்று காலம் வரை நீடிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தற்பொழுது வறட்சியான வானிலை நிலவும் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தொடர்ச்சியாக வறட்சியான நிலைமை காணப்படுவதால் எதிர்காலத்தில் காற்றின் வேகம் குறையக்கூடும் என்றும், இதனால் ஈரப்பதனுடன் இணைந்து உடலால் உணரும் வெப்பநிலை மீண்டும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...