tamilni 70 scaled
இலங்கை

விபத்தில் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே பலியான பெண் : யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

Share

விபத்தில் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே பலியான பெண் : யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

கொழும்பில் (Colombo) இருந்து வவுனியா (Vavuniya) நோக்கி பயணித்த சொகுசு பேருந்துடன் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ அறிக்கைக்காக நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் சந்தேக நபரான சாரதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்தானது நொச்சியாகம பகுதியில் நேற்று (30) இடம்பெற்றுள்ள நிலையில், இந்த விபத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவியே முகங்கொடுத்துள்ளனர்.

அத்தோடு, ராஜாங்கனை யாய 15 இல் வசிக்கும் 34 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் குறித்த பெண் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் நொச்சியாகம நகரை நோக்கி பயணித்த போது இந்த விபத்திற்குள்ளானதாகவும் மற்றும் விபத்தில் கணவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தை அதிவேகமாக செலுத்தியதாலும் மற்றும் பேருந்து சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம போக்குவரத்து காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாரதியை நொச்சியாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...

25 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விமானச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க விசேட நடவடிக்கை: பிரதி அமைச்சர் தலைமையில் முக்கியக் கலந்துரையாடல்

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், சிவில் விமானச் சேவைகளைத் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

24 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல்: இந்திய நிறுவனத்திற்கு அனுமதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில், அவசரகால அடிப்படையில் 05...