வவுனியாவில் 109 பேருக்கு கொரோனா!
வவுனியாவில், 13 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உட்பட 109 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு, தெற்கு, செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டிருந்தன.
அதன் அடிப்படையில், வவுனியா – ஈரப்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு படை முகாமில் கடமை புரியும் 13 வீரர்கள் உட்பட 109 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
Leave a comment