யாழ். மாவட்டம் உட்பட மாவட்ட ரீதியிலும் அரச எதிர்ப்பு நடவடிக்கையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி இம்மாதத்துக்குள் மொனறாகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பாரிய அரச எதிர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்பின்னர் வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்களிலும் அரச எதிர்ப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். இதற்கான பொறுப்பு மாவட்ட அமைப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னர் கடந்த 15 ஆம் திகதி சஜித் அணியினர் பாரியதொரு போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர். இதற்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட ரீதியிலும் இவ்வாறான போராட்டங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment