25 677b28843471a
இலங்கைசெய்திகள்

ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் செய்த மிகப்பெரிய மோசடி! அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அநுர அரசு,

Share

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) 320 மில்லியன் ரூபா தொகையை முறைகேடாக செலவு செய்தமை தொடர்பிலான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகர(Eranga Gunasekara) தெரிவித்துள்ளார்.

தணிக்கை அறிக்கையின் கண்டுபிடிப்புகள் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், 320 மில்லியன் ரூபா தொகையானது, ஹரின் பெர்னாண்டோ அமைச்சராக இருந்த காலத்தில் எவ்வாறு முறைகேடாக செலவுசெய்யப்பட்டது என்ற தகவல்களை தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட இசை நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு இந்த தொகை செலவு செய்யப்பட்டதாக முன்னதாக தெரியவந்தது.

அப்போதைய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பில் வெளியாகிய கணக்காய்வு அறிக்கையின்படி, செலவழிக்கப்பட்ட மொத்தத் தொகை 320,339,323 என கூறப்பட்டுள்ளது.

மஹரகம, காலி, அம்பாறை, குளியாப்பிட்டிய, புத்தளம், தம்புள்ளை, யாழ்ப்பாணம், மஹியங்கனை, ஹட்டன், ஹிங்குராங்கொட, பண்டாரவளை, வெலிசறை, கொழும்பு ரேஸ்கோர்ஸ், கேதாராம மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கான செலவு விவரங்கள் பின்வருமாறு கணக்கிடப்பட்டுள்ளது.

“மஹியங்கனை பொது விளையாட்டு மைதானம் (பதுளை மாவட்டம்): 64,986,789 ரூபாய்.

பண்டாரவளை நகரசபை மைதானம்: 20,179,185 ரூபாய்

மஹரகம இளைஞர் சேவைகள் மன்றம்: 16,667,851 ரூபாய்

சமணலா மைதானம் (காலி): 31,417,778 ரூபாய்

வீரசிங்க விளையாட்டரங்கம் (அம்பாறை): 9,491,477 ரூபாய்

குளியாபிட்டிய தொழில்நுட்பக் கல்லூரி மைதானம்: 68,105,908ரூபாய்

புத்தளம் கடற்கரை மைதானம்: 14,834,651 ரூபாய்

தம்புள்ளை: 15,289,150 ரூபாய்

முற்றவெளி மைதானம் (யாழ்ப்பாணம்): 39,037,339 ரூபாய்

ஹட்டன் டன்பார் மைதானம்: 234,592 ரூபாய்

ஹிங்குராக்கொட டட்லி சேனாநாயக்க மைதானம்: 14,830,835 ரூபாய்

கேத்தாராம மைதானம் (கொழும்பு): 13,685,800 ரூபாய்

கொழும்பு ரேஸ்கோர்ஸ்: 14,571,192 ரூபாய்

வெலிசர மைதானம்: 60,700 ரூபாய்” என கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த செலவு விபரங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அரசாங்கத்தான் சில உயர்மட்ட தரப்புக்களின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இது தொடர்பான தணிக்கை அறிக்கை, அனைத்து ஆவணங்களுடன், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Featuredgughik
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர் முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா”...

இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...

சுரேஷ் சலே 10
இலங்கை

சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத...

person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...