இலங்கை எதிர்நோக்கியுள்ள கடும் பொருளாதார சவால்கள் தொடர்பில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு மேற்கொள்ள வேண்டிய உதவிகள் தொடர்பில் வாஷிங்டன் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுடன், இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் இன்று பேச்சு நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தல் மற்றும் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது .
#SriLankaNews