மேலும் 161 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!!
இலங்கையில் மேலும் 161 பேர் நேற்றுக் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 83 பேர் ஆண்கள் என்றும், 78 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 96 ஆக உயர்ந்துள்ளது.
Leave a comment