image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

Share

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த நவம்பர் 28ஆம் திகதி நீரில் இழுத்துச் செல்லப்பட்ட கடற்படையைச் சேர்ந்த 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

புதுமாத்தளன் பகுதியில் குறித்த நபரின் உடலம் மீட்கப்பட்டதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர், இலங்கை கடற்படையின் மின்பொறியியல் பிரிவில் (Electrical Engineering Division) பணியாற்றியவர் ஆவார்.

மாஞ்சோலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலத்தை உறவினர்கள் அடையாளப்படுத்தி, உறுதி செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காணாமல் போன ஏனைய நான்கு கடற்படை வீரர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் சீரற்ற வானிலைக்கு மத்தியில் முகத்துவாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த ஐந்து கடற்படை வீரர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...

25 6930ccccd21a5
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இளைஞர் படுகொலை: கைதான 6 பேரின் விளக்கமறியல் டிசம்பர் 15 வரை நீடிப்பு!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...