முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!
இலங்கைசெய்திகள்

முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!

Share

முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!

இலங்கையில் டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் தீவிரமடையும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, தற்போதைய நிலைமையில் மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் அரச அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளரான பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அடுத்த இரண்டு – மூன்று வாரங்கள் இலங்கைக்கு மிகவும் தீர்மானமிக்கவை. சீனாவின் வுகான் மாநிலத்தை விடவும் இரண்டு மடங்கு வேகத்தில் இங்கு தொற்றுப் பரவுகின்றது.

இவ்வாறான நேரத்தில் நாங்கள் 5 விநாடிகளுக்கு முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட நமக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதனால் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இதேவேளை, எதிர்காலத்தில் நம்மிடையே உணவு இன்றி இறப்பதா? ஒட்சிசன் இன்றி இறப்பதா? என்ற கேள்விகள் எழலாம்.

ஆனால், உணவு இல்லாவிட்டால் இருப்பவர்கள் எமக்கு வழங்குவர். ஒட்சிசன் இல்லாவிட்டால் எம்மால் வாழவே முடியாது போகும். இதனால் இது தொடர்பில் தீர்மானங்களை அரச அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...