Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மின்சாரம், குடிநீர் பாவனையை குறைக்குக! – அரசு ஆலோசனை

Share

நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் பாவனையை 50 வீதத்தால் குறைக்குமாறு நாடாளுமன்ற பிரதானிகளுக்கு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் மின்சாரத்துக்கும் குடிநீருக்கும் வருடாந்தம் 8 கோடி ரூபா செலவிடப்படுகின்றது.

இந்நிலையில் மேற்படி உத்தரவின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் பாவனையை கட்டுப்படுத்த ஏற்கனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நாடாளுமன்ற பொறியியலாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னாலுள்ள நீர் நிலையிலிருந்து நீர் வழிந்தோடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த பொறிமுறை மின்சாரப் பாவனையை குறைக்கும் முகமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அழகு சேர்க்கும் வகையில் நீர் நிலையிலிருந்து நீர் வழிந்தோடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இதற்காக நான்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் பாவிக்கப்பட்டன இதை நிறுத்துவதால் 75 மெகா வோட் மின்சாரம் சேமிக்கப்படுவதாக பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் சி. எப்.எல் மின்குமிழ்களுக்குப் பதிலாக எல்.ஈ.டி மின்குமிழ்கள் பாவிக்கப்படுவதாகவும் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...